Saturday, April 27, 2024
-- Advertisement--

அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு தமிழக DGP சைலேந்திர பாபு செய்த மாபெரும் உதவி..!!! குவியும் வாழ்த்துக்கள்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அடிக்கடி நல்ல நல்ல பதிவுகளை இணையத்தில் பதிவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வையும் நம்பிக்கையும் கொடுத்து வருகிறார். BITCOIN -ல் பணம் போட்டு ஏமாறாதீர்கள் அது போல நடிகர்கள் விளம்பரத்தில் சொல்கிறார்களே என்று ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடாதீர்கள் பணத்தை இழந்து தவிக்காதீர்கள் என்று தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை கொடுத்து வருகிறார்.

DGPயாக பொறுப்பேற்ற தினத்தில் இருந்து இன்றுவரை சக்கரமாய் சுழன்று கொண்டிருக்கிறார் மனிதர். தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சைக்கிளிங் செல்வதும் செல்லும் வழியில் மக்களுக்கு தேவையான விஷயங்களை பகிர்ந்து கொள்வார்.

டிஜிபியாக அவரது பணியை மட்டும் செய்யாமல் மக்கள் மீது இருக்கும் அக்கறையால் சில அறிவுரைகளும் கூறி வருவார். படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சத்தமில்லாமல் நிறைய உதவிகள் செய்து இருக்கும் இவர் கீர்த்தனா என்ற அரசு பள்ளியில் படித்த மாணவிக்கு VIT பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கி கொடுத்து படிக்க வைத்து உள்ளார்.

தற்பொழுது கீர்த்தனா அவர்கள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று கட்டணமில்லா கல்வி வழங்கிய VIT பல்கலைக் கழகத்திற்கு நன்றி என்று கூறியுள்ளார் தமிழக DGP திரு. சைலேந்திர பாபு அவர்கள். இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles