இயக்குனர் தாமிரா இவர் ரெட்டை சுழி, ஆண்தேவதை என்ற படத்தை இயக்கியுள்ளார். இவருடைய பெயர் ஷேக் தாவுத் இவரை சினிமா வட்டாரத்தில் தாமிரா என்று அழைப்பார்கள். ஆண் தேவதை என்ற படத்தில் நல்ல கருத்தை எடுத்து சொல்லி இருந்த தாமிரா தற்பொழுது ஜெமினி நிறுவனத்திற்காக கதை தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது கொரோனவால் பாதிக்கப்பட்டார்.
அதன்பின் 20 நாட்களுக்கு முன்பு சென்னை அசோக் பில்லர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஓரளவிற்கு உடல் நிலை தேறி வருவதாக செய்திகள் வெளிவந்தது தற்பொழுது திடீரென்று இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தாமிரா இவருக்கு 53 இவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மேலும் ஒரு தமிழ் இயக்குனர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.