Thursday, May 9, 2024
-- Advertisement--

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனவால் பலி..!!! சோகத்தில் தமிழ் திரையுலகம்.

உலக அளவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகரான நடிகர் விவேக் இறந்தது இன்னும் துயரிலிரந்து மக்கள் மீள முடியாமல் இருந்து வருகின்றனர் இதைத்தொடர்ந்து திரைத்துறையில் பல்வேறு பிரபலங்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர் ஆனால் என்று நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளார்.

சென்னையில் உள்ள உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் நகைச்சுவை நடிகர் பாண்டு அவர்களின் மனைவியரும் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக காதல்கோட்டை, ஏழையின் சிரிப்பினிலே , சின்னதம்பி உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது அவர் ஓவியக் கலையில் மிகவும் திறமை வாய்ந்தவராக இருந்துள்ளார் அது மட்டும் அல்லாமல் பிரபலங்களில் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களில் பெயர் பலகைகள் மற்றும் அழகு ஓவியங்களை வடிவமைத்துள்ளார்.

அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் கேப்பிடல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் பாண்டுவின் மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles