பிக் பாஸ் சீசன் 5ல் பொதுமக்களில் ஒருவராக மற்றும் கூத்துப்பட்டறை கலைஞர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரை செல்வி .
ஆரம்பத்தில் இவர் ஜூலி போல் பல அவமானங்களை பெறுவார் என்று நினைத்திருந்தனர். ஆனால் அங்கு பங்கு பெற்ற 16 போட்டியாளர்களுக்கும் சவால் விடும் வகையில் பிக் பாஸ் சீசன் 5ல் சிறந்த போட்டியாளராக விளங்கினார் தாமரை செல்வி.
பெரிய கல்வியும் பெரிய நட்சத்திர பழக்க வழக்கமும் இல்லை, இருப்பினும் 90 நாட்கள் வரை மக்கள் மனதில் ஒரு நீங்கா இடத்தை பிடித்தார் தாமரை செல்வி. பிக் பாஸ் சீசன் 5ல் அவருக்கு பணப்பெட்டியை எடுத்துப் போகும் வாய்ப்பு கிடைத்த போது கூட தனக்கு ஏகப்பட்ட கடன் பிரச்சினை இருந்தாலும் எப்படியாவது இந்த போட்டியில் வெல்வது எனது லட்சியம் என பணத்தை கூட பொருட்படுத்தாமல் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றார்.
பிக் பாஸ் சீசன் 5ல் இருந்து வெளியேறிய பிறகு தாமரை செல்விக்கு பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.
தாமரை செல்வி பிக் பாஸில் தன் வாழ்க்கையைப் பற்றி கூறும் பொழுது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை தனக்கு கல்யாணம் செய்து தந்ததாகும் அப்பொழுது எனக்கு ஒரு மகன் பிறந்ததாகவும் கூறினார். இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு வந்தவுடன் இருவரும் பிரிந்து விட்டோம்.
அதன் பிறகு தான் தாமரை செல்வி இரண்டாவது திருமணம் செய்து தற்பொழுது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் அவரது முதல் மகனை அவரால் மறக்க முடியவில்லை என்றும் எப்படியாவது என் மகனுடன் நான் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் கண்ணீர் மல்க கூறி இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 5 ல் இருந்து வெளியேறிய பிறகு தன் முதல் மகனுடன் நீண்ட வருடங்களுக்கு பிறகு தாமரை செல்வி சேர்ந்துள்ள இணையத்தில் வைரலாகி உள்ளது.