Monday, May 6, 2024
-- Advertisement--

கொரோனா சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் செவிலியர்களை நேரில் பார்த்து நன்றி தெரிவித்த நடிகை தமன்னா..!!! புகைப்படங்கள் உள்ளே.

தமன்னா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர். இவரை மில்கி பியூட்டி என்று செல்லமாக அழைப்பார்கள் ரசிகர்கள். பிற நடிகைகளை காட்டிலும் தமன்னா எதற்கும் நோ சொல்லாமல் இயக்குனர் விரும்பும்படி காட்சிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று ஒப்புக்கொண்டதால் தமன்னாவின் கால்ஷீட் வாங்கியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

தெலுங்கு மொழி படங்களை பொறுத்தவரை கமர்சியல் படங்களில் சற்று கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். தமிழில் அடக்கி வாசித்த தமன்னா தெலுங்கு மொழிகளில் தாராளம் காட்டியது அனைவரும் அறிந்த ஒன்றே.

கத்தி சண்டை என்ற படத்தில் நடித்த போது இயக்குநர் சிராஜ் தமன்னாவிற்கு வேண்டுமென்றே அளவு குறைவான ஆடைகளை கொடுத்து நடிக்க சொன்னாராம். இதனை ஒரு பேட்டியில் அவரே கூறினார் தமன்னாவை வைத்து நான் காட்ட வேண்டியதை காட்டினால் தான் ரசிகர்கள் குஷி ஆவார்கள் என்று கூறினார். அவரின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனம் வந்தது அதன் பின் ஒரு சில படங்களில் கவர்ச்சி தவிர்த்து வந்த தமன்னா. வழக்கம் போல ஒரு சில படங்களுக்குப் பிறகு தாராளம் காட்ட ஆரம்பித்தார்.

தமன்னா கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் தான் நீண்ட நாட்கள் சிகிச்சை முடிந்து தனது வீட்டிற்கு திரும்பி வந்தார் அதன் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்பொழுது தமன்னா தனக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் நேரில் சென்று நன்றி சொல்லி அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles