சூர்யா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த ஒரு நல்ல நடிகர் திடீரென்று கமர்சியல் படங்களில் மட்டும் நடித்ததால் அவர் நடிப்புக்கு முந்தைய படங்கள் போல தீனியாக அமையவில்லை சமீபத்தில் வெளியான சூரரை போற்று என்ற படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பை பார்க்க முடிந்தது. சூர்யாவின் நேரமோ என்னமோ அந்த படம் கொரோனா காலகட்டம் என்பதினால் தியேட்டரில் வெளியாகாமல் அமேசான் OTTயில் ரிலீசானது. இருந்தாலும் சூரரை போற்று படத்திற்கு மக்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்தனர்.
கதைகளைத் தேர்வு செய்வதில் தீவிரம் கவனம் செலுத்தி வரும் சூர்யா அடுத்து அடுத்து வெற்றி இயக்குனர்களுடன் கைகோர்க்க உள்ளார். தற்பொழுது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கிறார் அதனை முடித்துவிட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் அதனைத்தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா அதன்பின் பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பரியேறும் பெருமாள் பல விருதுகளை தட்டிச் சென்ற படம் சமீபத்தில் வெளியான கர்ணன் இன்னும் பல விருதுகளை பெறும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் சூர்யாவின் நடிப்பிற்கு மாரி செல்வராஜின் கதை பெரிய தீனியாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.
மாரி செல்வராஜ் தற்பொழுது விக்ரமின் மகன் துருவ் படத்தை முடித்த பின் சூர்யாவின் படத்தை தொடங்கும் பணியில் ஈடுபடுவர் என்று கூறப்படுகிறது.
கூடுதல் தகவல் என்ன என்றால் சூர்யாவை வைத்து மாரி செல்வராஜ் எடுக்க போகும் படத்தை கர்ணன் படத்தை தயாரித்த கலைப்புலி தாணு தான் தயாரிக்க உள்ளாராம்.
இந்த செய்தி வெளிவந்தவுடன் சூர்யாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.