ஸ்டாலின் பல வருடங்களாக திமுகவில் தனது தந்தைக்கு துணையாக நின்று கட்சிக்காக உழைத்த இவருக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்காமலே இருந்தது. ஒரு தேர்தலில் மோசமான தோல்வியையும் அடைந்தார்கள் திமுகவை சார்ந்தவர்கள். தோல்வி அடைந்துவிட்டோம் என்று துவண்டு போகாமல் எதனால் தோல்வி பெற்றோம் என்பதை ஆராய ஆரம்பித்தனர். அதிமுக ஆட்சியில் திமுக எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டே மக்களின் குறைகளை கேட்டறிய தொடங்கினர்.
ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின் உங்களது குறைகளை 100 நாட்களில் தீர்க்கிறேன் என்று சபதம் எடுத்து புகார் பெட்டி ஒன்றையும் கொண்டு சென்றார்.
அதிமுகவோ மக்களிடம் இறங்கி வேலை பார்க்காமல் கூட்டணியை பெரிதாக நம்பிக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பெரிய எதிர்ப்பு இருக்க இவர்கள் கூட்டணி இன்னும் மக்களை டென்சன் ஆக்கியது.
இந்தத் தேர்தல் அனைத்து வகையிலும் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது. களத்தில் இறங்கி வேலை பார்த்த திமுகவினருக்கு பெரிய வாக்குகளை அள்ளிக் கொடுத்தனர் மக்கள். இன்று தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அவர்கள் முதல் கையொப்பம் எதற்கு போடப் போகிறார் என்று அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது முதல் கையெழுத்தை குர்னா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டை ஒன்றிற்கு 4000 அறிவித்து கையெழுத்து போட்டு இருந்தார். நகர்புற பேருந்துகளில் மகளிர்கள் இலவசமாக பயணம் செய்ய கையெழுத்திட்டிருந்தார். ஆவின் பாலின் விலையிலிருந்து மூன்று ரூபாய் குறைத்துள்ளார். இது அனைத்திற்கும் மேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்று கையெழுத்திட்டுள்ளார்.
ஆட்சியில் அமர்ந்த முதல் நாளே தூள் கிளப்பிய முதல்வர் ஸ்டாலினின் செயல்களை பார்த்து பாராட்டி வரும் இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கிப்ட் ஒன்று கொடுத்து அசத்தி உள்ளனர். அதில் கலைஞர் அவர்கள் சிரித்துக் கொண்டே ஸ்டாலினுக்கு பொன்னாடை போற்றுவது போலவும் அறிஞர் அண்ணா அவர்கள் ஸ்டாலினை சிரித்துக்கொண்டே பார்ப்பது போலவும், பெரியார் அவர்கள் ஸ்டாலின் தொழுகை வைத்துக்கொண்டு சிரித்தபடி இருந்தது அந்த புகைப்படம்.
மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ஸ்டாலின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து அவருக்கு அன்பு பரிசாக கொடுத்து உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.