Saturday, May 11, 2024
-- Advertisement--

ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்யதார்…? படத்தில் மட்டும் சூப்பர்ஸ்டாராக இருந்தா போதுமா – மன்சூர் அலிகான் ஆதங்கம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஒரு பக்கம் வசூல் சாதனை புரிந்து தியேட்டருக்கு மக்கள் படையெடுத்து வருகின்றன சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு உண்மையான பிளாக்பஸ்டர் திரைப்படம் என்றால் கண்டிப்பாக இந்தப் படத்தை கூறலாம்.

பல வருடங்கள் பெரிய ஹிட் கொடுக்காமல் தவித்து வந்த ரஜினிக்கு ஜெயில ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

ரஜினி ஹீரோ நிஜத்தில் அல்ல:

இது ஒரு புறம் இருக்க பிரபல நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பற்றி முதல் முதலாக நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபல வீடியோ ஒன்றில் பேசியுள்ளார் அதில் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை ஆனால் அவர் படத்தில் மட்டும் தான் ஹீரோவாக இருக்கிறார்.

ரஜினி மீது கோபம் இதனால் தான்:

சூப்பர் ஸ்டார் எல்லாம் படத்தில் மட்டும் தான் அதுதான் எனக்கு பெரிய வருத்தம் நிஜத்தில் அவர் சூப்பர் ஸ்டார் இருக்க வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் அவர் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவர் செய்யவில்லை அதுதான் எனக்கு அவர் மீது பெரிய கோபம்.

கன்னட நடிகர் புனீத் இறந்தும் வாழ்கிறாரே:

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் இன்று இல்லை மறைந்த பின்னும் அவர் செய்த நல்ல விஷயங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது. மக்களுக்கு அவ்வளவு நல்லது செய்துள்ளார் இறந்த பின்பும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இன்று வரை மக்கள் அவரை மறக்கவில்லை அவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார்.

ரஜினி ஏன் தமிழ் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை?

அதுபோல ரஜினி மக்களுக்கு செய்ய முன்வராதது எனக்கு வருத்தமே தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் மன்சூர் அலிகான்.

ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்யதார்…? படத்தில் மட்டும் சூப்பர்ஸ்டாராக இருந்தா போதுமா – மன்சூர் அலிகான் ஆதங்கம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles