சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது அண்ணாத்த திரைப்படம் இது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தியாக அமைய மேலும் ஒரு ஹேப்பி நியூஸ் ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கிறது அது என்னவென்றால் திரை உலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு நாளை வழங்க உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை ஏழு மணி நேரம் எடுத்து உள்ளார்களாம் அதனை வெளியிட உள்ளார்களாம். ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை டிடி சேனலில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது ஒன்று மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது, இரண்டாவது என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய Hoote என்கிற ஆப்பை உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார்.
அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும் விஷயங்களையும் இனி அவர்களது குரலிலே எந்த மொழியிலும் Hoote APP மூலமாக பதிவிடலாம் இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான ஹார்டி ஆப்பை என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.