சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததால் சரியான ஒரு கமர்ஷியல் படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் ரஜினி.
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்து மிரண்டுபோன ரஜினி சிவாவிற்கு உடனே கால் செய்து பாராட்டுக்களை தெரிவித்ததோடு எனக்கு ஒரு நல்ல கதையை ரெடி பண்ணிட்டு வாங்க என்று கூறியிருந்தார். அதன்பின் ரஜினிக்கு ஒரு கமர்சியல் கதை கூறி இருக்கிறார் சிறுத்தை சிவா. அந்தக் கதை ரஜினிக்கு பிடித்துப் போக படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ நடிக்கிறார்கள் என்று கூறி இருந்தனர். விஸ்வாசம் படத்திற்கு இசை அமைத்த இமான் தான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அண்ணாத்த என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.
கடைசியாக ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை அவர் வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது. கொரோனா நேரம் என்பதினால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருந்தனர் படக்குழு.
தற்போது டிசம்பர் 15ஆம் தேதி படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளனர். நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடி விட்டு இன்று ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார் ரஜினி.
சற்று நேரத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஷர்ட்டுடன் விமான நிலையத்துக்கு வந்து இறங்கினார். அதன்பின் ரஜினி நயன்தாரா இருவரும் ஒரே விமானத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அடைந்தனர்.