Friday, May 3, 2024
-- Advertisement--

தமிழ் மக்கள் இல்லாமல் யாரும் இல்லை..!!! வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவுடன் ரஜினி பேசிய உருக்கமான பேச்சு..!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருது டெல்லியில் வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மாப்பிள்ளை தனுஷ் மகள் ஐஸ்வர்யாவுடன் தனது பேரக் குழந்தைகளுடன் டெல்லி சென்றிருந்தார்.

சிறந்த நடிகருக்கான விருதை ரஜினியின் மாப்பிள்ளை தனுஷ் பெற்றிருந்தார். அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. அந்த விருதை வெங்கையா நாயுடு அவர்கள் கொடுக்க தனுஷ் பெற்றுக் கண்டார் அப்பொழுது பாஜக எல் முருகன் அவர்களும் உடன் இருந்தார். சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்.

சூப்பர்ஸடார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதை கொடுத்து பெருமைபடுத்தினார்கள் விருதைப் பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விருதை என்னுடைய குருநாதர் கே பாலச்சந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்னுடைய சகோதரருக்கு நன்றி அதனை தொடர்ந்து கர்நாடகாவில் நான் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தபோது ஓட்டுநராக பணிபுரிந்த எனது நண்பன் ராஜ்பகதூர் தான் என்னுள் இருந்த திறமையை கண்டு பிடித்து என்னை சினிமாவில் சேர ஊக்குவித்தார் அவருக்கும் நன்றி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தமிழ் மக்கள் அவர்கள் இல்லாமல் யாரும் இல்லை என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி ஜெய் ஹிந்த் என்று உருக்கமாக உரையை முடித்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles