சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சிறுத்தை சிவாவின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்து சென்னை திரும்பிய அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
விஸ்வாசம் படத்தை பார்த்த ரஜினி உடனே சிவாவிற்கு கால் செய்து படம் நன்றாக இருந்தது எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க என்று கூறியிருந்தார். ரஜினிக்கு ஒரு கதையை ரெடி செய்து எடுத்துக் கொண்டு அவரை சந்தித்தார் சிவா. அந்தக் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக அப்படி உருவானதுதான் அண்ணாத்த.
இந்த படத்தில் நிறைய நடிகர்-நடிகைகள் பட்டாளமே நடித்துள்ளார்கள். குறிப்பாக மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என்று நட்சத்திரங்களில் லிஸ்ட் எகிறிக் கொண்டே போகிறது.
அண்ணாத்த படம்தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் அதன்பின் ரஜினி அரசியலில் இறங்குவார் என்று செய்திகள் முதலில் வெளிவந்தது. இடையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ரஜினி அவர்கள் அரசியலுக்கு நான் வரவில்லை என் உடல் ஒத்துழைக்கவில்லை என்பதை தெரிவித்திருந்தார்.
ரஜினி அரசியலுக்கு வராதது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தாலும் ரஜினியின் உடல்நிலை மிக முக்கியம் என்பதால் அமைதியாக இருந்தனர்.
சில இயக்குனர்களை கதை ரெடி செய்ய கூறியுள்ளாராம் ரஜினி ஓய்வுக்குப் பின் விரைவில் கதை கேட்க இருக்கும் ரஜினி தற்பொழுது தனது மூத்த மருமகன் தனுஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகிறார் என்ற செய்திகள் சினிமா வட்டாரத்தில் இன்று பேசப்பட்டு வருகிறது.
தனுஷ் தன்னை நல்ல பாடகர், நல்ல நடிகர் என்று திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கும் அவர் நல்ல இயக்குனர் என்ற பெயரை பெறுவதற்காக ரஜினியை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் உண்மை என்றால் மருமகன் இயக்கத்தில் மாமனார் எப்படி இருக்கும்.