தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்சியினர் தங்களது ஊர்களில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றனர். அதோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
ஆதலால் பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவை சேர்ந்த வேட்பாளர் போட்டியிடவுள்ளார்.
அவருக்கு ஆதரவாக ஸ்டீபன் என்ற வெளிநாட்டவர் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட ஸ்டீபன் திமுக கட்சிக்கு ஆதரவாக வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இதனை திமுக தொண்டர்கள் ஸ்டீபனை பற்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் ஸ்டீபன் திமுக தொண்டர்கள் கோவை மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர். ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் வேலை நிமித்தமாக கோவை வந்துள்ளார்.
மேலும் ஸ்டீபன் திமுக தொண்டர் அணிந்தவாறு சாலையில் நடந்து இருசக்கர சென்றும்,வாகனங்களில் பயணித்தும் மற்றும் பேருந்துகளில் பயணித்தும் பொதுமக்களிடையே பரப்புரையை மேற்கொண்டு துண்டு பிரதிநகள் கொடுத்து திமுகவிற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.