Monday, May 6, 2024
-- Advertisement--

வீட்டில் இருந்தே வெற்றியை கொண்டாடுங்கள் தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்.

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் இந்த நேரத்தில் ஸ்டாலின் அவர்கள் தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. நாளை ஊரடங்கு என்பதினால் வேட்பாளர்கள் ஏஜெண்டுகள் தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் மையம் முன்பு வரக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது அதே நேரம் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடுவது, ஊர்வலம் நடத்துவது போன்ற விஷயங்களுக்கு தடை அறிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று உழைப்பாளர்கள் தினத்தையொட்டி கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரை பணையம் வைத்து மக்களின் உயிருக்கு போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மே தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வந்துள்ளார் ஸ்டாலின்.

பல்வேறு ஊடகங்களில் கருத்து கணிப்பில் திமுக முன்னணியில் இருப்பது உற்சாகமாக இருக்கிறது என்று கூறியவர் . தமிழகமோ கொரோனா காரணமாக தள்ளாடிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதி படும் நிலையை ஊடகங்களை பார்த்து நான் தெரிந்து கொள்கிறேன் இந்த சூழ்நிலையில் வாக்கு என்னும் இடங்களில் கூட்டமாக குவிந்து சாதகமான முடிவுகள் வரவர ஒன்றுகூடிய மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெரும் தொற்றுக்கு ஆளாகி விட வேண்டாம் அனைவரும் வீட்டில் இருந்தே வெற்றியை கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles