உதயநிதி முதலில் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.
தளபதி விஜயின் தீவிர ரசிகரான உதயநிதி ஸ்டாலின் முதலில் கில்லி படத்தை எடுத்த தரணி இயக்கத்தில் விஜய் நடித்த குருவி என்ற படத்தை முதல் முதலாக தயாரித்தார் உதயநிதி. நடிகரையும் இயக்குனரையும் சரியாக தேர்வு செய்த உதயநிதி கதையை தேர்வு செய்ய தவறினார் அதனால் குருவி படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதே உண்மை.
குருவி படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் விஜய் அவர்களுக்கும் ஒரு சில வாக்குவாதங்கள் நடந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் விஜய் வீட்டிற்கு நேரில் சென்று நடந்த பிரச்சனைகளை எடுத்து விளக்கிய பின் நடந்ததை விடுங்கள் என்று சமரசம் ஆகி விட்டார்கள் விஜய்யும் உதயநிதியும்.
அதன்பின் உதயநிதி சினிமாவில் நடிப்பதை பார்த்த விஜய் உதயநிதிக்கு கால் செய்து உன்னுடைய படங்களின் ஸ்டில்ஸ் பார்த்தேன் ரொம்ப நல்ல இருக்கு என்று வாழ்த்துக்கள் தெரிவித்தாராம் தளபதி விஜய்.
சரியான கதையை தேர்ந்தெடுத்து தயாரிப்பாளராக வெற்றி பெற்றார் உதயநிதி. ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் அவர் முதல் முதலாக நடித்த படம் தான் ஒரு கல் ஒரு கண்ணாடி.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தினை பார்த்துவிட்டு அவருடைய மனைவி ஓகே படம் நல்லா இருக்கு என்று கூறியிருக்கிறார். உதயநிதியின் தந்தை ஸ்டாலின் அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு நீ நல்லா நடிச்சு இருக்க ஆனா படம் சுமாராகத்தான் இருக்கிறது என்று கூறியிருந்தாராம். தன் பேரன் படத்தைப் பார்த்த கலைஞர் அவர்கள் படம் நல்லா இருக்கு 5படங்கள் நடித்தது போல நடித்திருக்க என்று பாராட்டினாராம்.
ஸ்டாலினைப் பொறுத்தவரை மனதில் பட்டதை உடனே சொல்லி விடுவாராம்.
சந்தானம் உதயநிதி காம்பினேஷன் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.