எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறுதி சடங்கிற்கு திடீரென்று கடைசி நேரத்தில் வந்து கலந்து கொண்டார் தளபதி விஜய். தமிழ் திரையுலகில் இருந்து பெரிய பிரபலங்கள் யாரும் வரவில்லையே என்று வருத்தப்பட்ட மக்களுக்கு அவர் வந்தது சற்று ஆறுதலாக இருந்தது. இறுதி சடங்கில் கலந்துகொண்ட விஜய் அவரது மகன் எஸ்பி சரணுக்கு ஆறுதல் கூறினார்.
எஸ்பிபி விஜய்க்காக பல ஹிட் பாடல்களை பாடிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரியமானவளே என்ற படத்தில் விஜயின் தந்தையாக நடித்து அசத்தி இருந்தார்.
எஸ்பிபி ஹீரோவாக நடித்த சிகரம் என்ற படத்தின் சூட்டிங் விஜயின் வீட்டில் தான் நடந்ததாம். அப்போது விஜய் சின்ன பையனாம். அங்கிள் உங்களுக்கு என்ன வேண்டுமென்று உபசரிப்பாராம்.
இந்த சம்பவத்தை எஸ்பிபி ஒரு மேடையில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடம் கூறியுள்ளார். விஜய் தற்பொழுது ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் பாடல்கள் அவரே பாடுகிறார் அதுபோல விஜயின் மகனையும் ரெடி செய்யுங்கள் நான் அவருக்கு பாடல் பாடுகிறேன் என்று கூறியுள்ளார். எஸ் பி பி யின் இந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று வருத்தத்தில் இருந்தாராம் SAC .