தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்பிபி. இவர் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவர் இந்தியாவில் தமிழில் மட்டுமல்லாது பிற மொழி படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இவருடைய பாடல் வரிகளாலும் பாடல்களாலும் அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவரை அறியாதவர்கள் எவரும் இல்லை. அந்த அளவிற்கு பேர் புகழையும் கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரோனாவால் கிருமித்தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் எஸ்பிபி அவர்களுக்கு உடல்நிலை குணமாக வேண்டும் என்பதற்காக அனைத்து ரசிகர்களும் மற்றும் நடிகர், நடிகைகள் அனைவரும் தங்கள் வீடுகளில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் அவருக்கு கொரோனா கிருமி தொற்று ஏற்பட பாடகி மாளவிகா தான் காரணம் என வாட்ஸப்பில் தகவல் பரவி வருகிறது இது நிலையில் மாளவிகா விளக்கம் அளித்துள்ளார்…
அதில் ராமோஜி பிலிம் சிட்டியில் ஜூலை 30 , 31 ஆம் தேதியில் எஸ்பிபி பங்கேற்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பு செய்யப்பட்டது. அதில் இரண்டு நாளில் கலந்து கொண்ட நான்கு பாடகிகளில் நானும் ஒருவர் அதனால் ஒரு வேலையில் எனக்கு கிருமித் தொற்று இருந்தால் மற்ற மூவருக்கோ, நிகழ்ச்சி தொகுப்பாளருக்கோ கொரோனாவை பரப்பியிருப்பேன்.
ஆனால் கடந்த 5 மாதங்களாக பாதுகாப்பு கருதி வெளியில் நான் செல்லவில்லை டிவி படப்பிடிப்புக்காக நான் முதன்முதலாக வெளியே வந்தேன் இந்த நிலையில் எஸ்பிபி மற்றும் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் என் குடும்பத்தாரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம்.
எனக்கும் என் அம்மா, மகள் மூவருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது என் கணவருக்கு கொரோனா கிருமித்தொற்று இல்லை என்றும் இந்த கடுமையான சூழ்நிலையில் நாங்கள் இருந்து வருகிறோம். அதனால் எங்களை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் வதந்தி பரப்புபவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.