Monday, May 20, 2024
-- Advertisement--

எஸ்பிபி பாடலை பாடி கூட்டுப் பிரார்த்தனை செய்ய முடிவு…! கமல், ரஜினி உள்பட பிரபலங்கள் பங்கேற்பதாக தகவல் வெளிவந்துள்ளது…!

டாக்டர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா கிருமித் தொற்று பரவல் காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அவருக்காக ஏற்கனவே பல்வேறு பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன.அவர்கள் அதிலிருந்து குணமடைந்து வீடு தீரும்ப வேண்டி அனைத்து நடிகர்களும் இணைத்து கூட்டு பிராத்தனை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

இந்த கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சியானது ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதாவது நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும். இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கமலஹாசன், ரஜினிகாந்த், பாரதிராஜா ,இளையராஜா, ஏ. ஆர்.ரஹ்மான், வைரமுத்து உட்பட பலர் தங்கள் வீடுகளிலிருந்து கலந்து கொள்ள உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமின்றி மேலும் பல திரையுலக முக்கிய பிரமுகர்களும் ரசிகர்களும் இந்த பிராத்தனையில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் பிரார்த்தனையின் போது எஸ்பிபி பாடல்கள் பிரபலங்கள் பாடிப் பிரார்த்தனை செய்ய உள்ளதாகவும் இந்த பிரார்த்தனை மூலம் எஸ்பிபி குணமடைவார் என்று நம்பிக்கையாக இருப்பதாகவும் இந்த கூட்டுப் பிரார்த்தனைக்கு பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் இந்த கூட்டு பிரார்த்தனையின் மூலம் எஸ்பிபி அவர்கள் மீண்டு வருவார். என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது என்று குறிப்பிட்டுள்னர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles