சூரரைப்போற்று படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கூலர் அணிந்துகொண்டு ஸ்டைலாக பைலட்டாக நடித்திருந்தவர் தான் வர்ஷா நாயர். இவர் உண்மையிலே விமான ஓட்டும் பைலட்டாம . சூரரைப்போற்று படத்தில் ஒரு சிறிய ரோல் அதற்கு நிஜமான பைலட் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அந்தப்படத்தின் அசிஸ்டன்ட் இயக்குனர் ஒருவர் வர்ஷாவை அணுகினாராம்.
அந்த அசிஸ்டன்ட் டைரக்டர் வர்ஷாவின் கல்லூரி நண்பராம் அதனால் சூரரைப்போற்று படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் பைலட் வர்ஷா. அவர் அந்தப் படத்தில் வந்தது நாலு செகண்ட் காட்சியாக இருந்தாலும் அழுத்தமான காட்சியாக அமைந்தது. வர்ஷா யார் என்பதை ஏகப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் தேட ஆரம்பித்தனர்.
சூரரைப்போற்று படத்தில் நடிப்பதற்கு முன்பே வர்ஷா ஓ மை கடவுளே என்ற படத்தில் அசோக் செல்வன் உடன் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார். அசோக் செல்வனும் பைலட் வர்ஷாவும் ஒரே அப்பார்ட்மெண்டில் வசிக்கிறார்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாம்.
பைலட் வாழ்க்கை பற்றி பகிர்ந்துகொண்ட வர்ஷா அதிகாலை சூரியன் உதிக்கும் நேரத்தில் விமானம் ஓட்டிக்கொண்டு போகும்போது பார்க்கும் காட்சி வேற லெவல் இருக்குமாம்.
அதே பேட்டியில் வர்ஷா நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்டதற்கு நான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை மாஸ்டர் படத்திற்காக வெயிட்டிங். விஜய் சேதுபதி மற்றும் விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் இந்த இருவரும் ஒன்று சேர்ந்து நடித்து வெளியாக இருக்கும் படம் மாஸ்டர் வாவ் என்று கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் உங்களைப் போன்று பைலட்டாக நினைக்கும் பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று ஒருவர் கேட்டதற்கு வர்ஷா பைலட் பொறுத்தவரை நிறைய தேர்வுகள் இருக்கும் தோல்வியை சந்தித்து ஆகவேண்டும் அதனைப் பார்த்து பயந்து விடக்கூடாது நிறைய படிக்க வேண்டியது இருக்கும். பைலட் லைசென்ஸ் பெற்றதற்கு பிறகும் பைலட் ஆன பின்பும் கூட நிறைய தேர்வுகள் இருக்கும் அதையெல்லாம் தைரியத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
வர்ஷா போல சிங்க பெண்கள் இருப்பது நமது தமிழ்நாட்டிற்கே பெருமை.