அபர்ணா முரளி இவர் தமிழ் சினிமாவில் சூரரைப்போற்று என்ற படத்தில் மூலம் பிரபலமானார் தமிழில் ஏற்கனவே 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்த இவர் அதனைத்தொடர்ந்து ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாள மயம் என்ற படத்தில் நடித்திருந்தார். அபர்ணா முரளியின் தந்தை மலையாள படவுலகில் இசையமைப்பாளராக இருக்கிறார் அவருடைய தாய் வழக்கறிஞராக இருந்தாலும் பல படங்களின் பாடல்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
இசையமைப்பாளரின் மகள் என்பதால் என்னவோ அபர்ணா முரளிக்கு நன்றாக பாடும் திறன் உள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் என்ற பாடலை ஸ்ருதி மாறாமல் அப்படியே பாடி அசத்தினார் அபர்ணா.
சூரரைப்போற்று படத்தில் முரண்டு பிடிக்கும் பெண்ணாகவும், தனது கணவர் சூர்யா கஷ்டப்படும் நேரத்தில் துணையாக நிற்கும் மனைவியாகவும், ரொமான்ஸ் காட்சிகளிலும் நன்றாக நடித்து அசத்தியிருந்தார் அபர்ணா. அந்தப் படத்தைப் பார்ப்பர்வர்களுக்கு இப்படி ஒரு மனைவி நமக்கு கிடைக்க மாட்டாங்களா என்று இளசுகளை ஏங்க வைத்தவர்.
நடிப்பிலும் சரி ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி வெளுத்து வாங்கிய அபர்ணா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் அவரைப் பார்த்தவர்கள் சூரரைப்போற்று படத்தில் நடித்த பொண்ணா இது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இவ்வளவு குண்டா ஆகிட்டாங்களே என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.