புன்னகை அரசி சினேகா தமிழில் மாதவன் நடித்த என்னவளே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார் அதனைத் தொடர்ந்து ஆனந்தம் படத்தில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்தார்.
ஒரு நேரத்தில் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல் சினேகா அதற்காகவே பல தடவை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
சினேகாவின் ஹோம்லியான முகத்தோற்றம் அவருக்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
தனது குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது தனது கணவர் பிரசன்னாவிற்கு சப்போர்ட்டாக இருப்பது என்று பிஸியாக இருந்த சினேகா சில வருடங்களாக தான் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் குறிப்பாக தனுஷ் அவர்களின் பட்டாஸ் படத்தில் தனுஷக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக நல்ல கதாபாத்திரங்கள் அமைய வேண்டும் என்பதனால் கதைகள் கேட்டு வருகிறார் சினேகா இந்நிலையில் சில விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இன்று சினேகா காவல் நிலையத்தில் திடீர் புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் தனியார் நிறுவனம் ஒன்று தங்களிடம் பெருந்தொகையை பங்காக கொடுத்தால் மாதம் குறிப்பிட்ட சதவீதம் லாபம் தருவதாக ஆசை காட்டியது. தாமும் முன்வந்து 25 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாக ஒரு லட்ச ரூபாயும் கொடுத்து ஏமாந்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
மாதம் 1.80 லட்சம் ரூபாய் தருவதாக தெரிவித்த அவர்கள் 5 மாதமாகியும் அசலையும் தரவில்லை மாதம் வரவேண்டிய பங்கு தொகையையும் தரவில்லை. பணம் குறித்து கேட்டால் தர முடியாது என அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார் சினேகா.
தனியார் நிறுவனத்தின் மீது சினேகா கொடுத்த புகார் முறைப்படி விசாரிக்க உள்ளனர் காவல்துறையினர்.