புன்னகை அரசி சினேகா தனது காதல் கணவர் பிரசன்னா மற்றும் மகனுடன் தீபாவளி கொண்டாடி அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார்.
சினேகா நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தவர் சினேகா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் வரிசையில் இருந்தது ஒரு நேரத்தில். சினேகா முதலில் வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்டு பெற்றோர்கள் சினேகாவின் திருமணத்தை நடத்த இருந்த நேரத்தில் அந்த நபருக்கும் சினேகாவுக்கும் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.
சினேகா இது குறித்து பேட்டி ஒன்றும் கொடுத்து இருந்தார் அதில் அந்த நபரை எனக்கு பிடிக்கவில்லை பெற்றோர்களுக்காக சம்மதித்தேன் என்று கூறியிருந்தார். அதன்பின் சில வருடங்கள் கழித்து நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது சினேகாவிற்கு அழகிய மகள் ஒன்றும் மகன் ஒன்றும் இருக்கிறார்கள்.
நெய்வேலி அருகே உள்ள பண்ரூட்டியில் சென்னை டு கும்பகோணம் சாலையில் சினேகாவின் கல்யாண மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தான் சொந்தமாக சம்பாரித்த பணத்தில் பல இடங்களை வாங்கி குவித்துள்ளார் சினேகா.