சினேகா தமிழ் சினிமாவில் அழகான கதாநாயகி மற்றும் புன்னகை அரசி என்று பல பெயர்கள் உண்டு இவருக்கு. சினேகா மாதவனின் என்னவளே படத்தில் அறிமுகமானார்.
குடும்ப பாங்கான கதாபாத்திரம் என்றால் சினேகாவை தான் இயக்குனர்கள் அணுகுவார்கள். குடும்ப படங்கள் எடுத்தால் அதில் சினேகா இருந்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர்கள் எண்ணமாக இருந்தது ஒரு நேரத்தில்.
தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த சினேகா சமீபத்தில் தனுஷுக்கு ஜோடியாக பட்டாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். சினேகா நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் 2009ஆம் ஆண்டு நடித்திருந்தார் அந்த நேரத்தில் சினேகா பிரசன்னா காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது முதலில் மறுத்து வந்த ஜோடி அதன்பின் ஒப்புக்கொண்டு திருமணமும் செய்துகொண்டார்கள். தற்பொழுது சினேகாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள்.
தனது குடும்பத்துடன் மாட்டுப் பொங்கலை கொண்டாடி அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.