சூர்யா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு பிரபலத்தின் மகனாக இருந்தும் சினிமாவில் ஒரு தனி இடத்தையும், அடையாளத்தையும் பெறுவதற்கு தோல்விகளை தாண்டி கடின உழைப்பால் வெற்றி பெற்றவர். சூர்யா என்றாலே ஒரு மென்மையான ஹீரோ அவருக்கு action கதாபாத்திரத்தில் ஒத்துவராது என்று ஒதுங்கிய இயக்குனர்கள் மத்தியில் பாலாவின் “நந்தா”, கவுதம் மேனனின் “காக்க காக்க ” ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. அதன் பின் கமெர்ஷியல் கதைகளில் நடிக்க தொடங்கிய சூர்யா தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் காதல் ஏற்ப்பட்டது.
சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் சிவகுமாரிடம் “சூர்யா காதல் திருமணம் செய்து கொண்டது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் செய்திகள் வருகிறதே” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு சிவகுமார் ” சூர்யா காதல் கல்யாணம் செய்து கொண்டது தப்பில்லை. சிவகுமார் ஆகிய நான் சாப்பிட்டிற்கு கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னேறி காட்டவேண்டிய கட்டாயம் இருந்தது அதனால் எனக்கு இந்த காதல் மேல் நாட்டம் இல்லை. நானும் மனிதன் தானே எனக்கும் சில ஆசைகள் இருக்காதா ஆனால் நான் வாழ்க்கையில் முன்னேறியே ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அதனில் அதற்கு நேரம் கொடுக்கவில்லை. சூர்யாவை பொறுத்தவரை சினிமாவில் நல்ல பெயரை சம்பாரித்துவிட்டார். அதன் பின் குடும்பத்தையும் வழிநடத்த அப்போதே தொடங்கிவிட்டார்.
தனது தங்கை திருமணம், அவரது தம்பி கார்த்தி வெளிநாட்டில் படிப்புக்கு துணையாக இருந்து குடும்பத்தை கையில் எடுத்து கொண்டவர். முதலில் ஜோதிகாவை காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் மௌனம் காத்தேன். நங்கள் இருவரும் திருமணம் கொள்கிறோம் என்று இருவரும் நாலு வருடங்கள் எனக்காக காத்திருந்தார்கள். அதன் பின் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன்.
சில பேர் அண்ணன் காதல் திருமணம் அதனால் தம்பி கார்த்தியை காதலிக்க விடவில்லையா என்றெல்லாம் கேட்டார்கள். ஒருத்தர் காதலித்தால் மற்றொருவரும் காதலிக்க வேண்டுமா. அவனுக்கு காதல் இல்லை அதனால் நங்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தோம்” என்று கூறியுள்ளார்.