சிவகார்த்திகேயன் சிங்கம்புணரி என்ற ஊரில் பிறந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சினிமாவில் ஹீரோவாக ஜெயித்த சிவகார்த்திகேயன் பல நல்ல படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் ஜெய்துள்ளார்.
தமிழ் படங்களுக்கு பாடல் வரிகளும் எழுதி கொடுத்து வருகிறார் சமீபத்தில் அவர் எழுதிய தளபதியின் அரபி குத்து பாடல் யூடியூபில் பல ரெக்கார்டுகளை செய்து வருகிறது. முதலில் விஜய் டிவியில் பணியாற்றி சிவகார்த்திகேயன் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அதன்பின் பாண்டியராஜ் அவர்களின் மெரினா என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.
சிவாவின் நகைச்சுவை நிறைந்த நடிப்புக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் படம் ஜாலியாக சென்று சிரித்து ரசித்து விட்டு வரலாம் என்று சிவகார்த்திகேயன் படத்தை பார்க்க தியேட்டரில் குடும்பங்கள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர்.
விஜயின் பார்முலாவை பக்காவாக பிடித்துக்கொண்ட சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தளபதி விஜய் அவர்களே ஒரு விருது வழங்கும் விழாவில் கிட்ஸ் எல்லாம் சிவகார்த்திகேயன் பிடிச்சிட்டாரு என்று பாராட்டி இருந்தார். விஜய் தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஹீரோ தற்பொழுது சிவகார்த்திகேயனை KIDS ரொம்ப விரும்புறாங்க என்று விஜய் கூறியிருப்பது பெரிய ஆச்சரியம்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் நல்ல வசூலை பெற்றது தற்போது அவருடைய தயாரிப்பில் டான் என்ற படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார் அந்தப் படத்திற்கும் தற்போது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் சிவகார்த்திகேயனின் கல்லூரி நாட்கள் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சியில் உள்ள ஜேஜே கல்லூரியில் படித்த சிவகார்த்திகேயன் தனது நண்பர்களுடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது அதுமட்டுமல்லாமல் கல்லூரியில் தனது நண்பர்களிடம் தனுஷ் போலவும் ரஜினி போலவும் பேசும் பழைய வீடியோ தற்போது இணையத்தில் அவரது ரசிகர்களை பகிரப்பட்டு வருகிறது.