சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி தமிழ் சினிமாவிற்கு காமெடியனாக அறிமுகமாகி அதன் பின் ஹீரோ அவதாரம் எடுத்து தற்பொழுது அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு எண்டர்டெயினர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனை வைத்து படம் செய்ய தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள் காரணம் சிவகார்த்திகேயன் ரஜினி விஜயின் பிசினஸ் பார்முலாவை நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு அதன்படி தனது சினிமா பயணத்தை நகர்த்தி வருகிறார். இன்றுடன் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிறது என்பதால் அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்
இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்…
நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான்
நினைத்து கூட பார்த்திராத நிஜம்.
இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும், உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, என் தாய்த்தமிழுக்கும். என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி-தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.
எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் – இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே!!!
என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும் என்று அனைவர்க்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.
மக்களை மகிழ்விக்கும் சிவகார்த்திகேயன் இன்னும் உயரம் செல்ல 24x7tamil மீடியாவின் வாழ்த்துக்கள்.