Friday, May 3, 2024
-- Advertisement--

வாயாடி பெத்த புள்ள பாடலை மழலை தமிழில் பாடி கொண்டாடிய சீன பெண்..!!! சீனாவில் ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயன் செய்த சாதனை.

சிவகார்த்திகேயன் மெரினா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி கடின உழைப்பால் தன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டு தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடித்து வந்த சில வருடங்களிலேயே SK ப்ரொடக்ஸ்ன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி திறமை உள்ள இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான அருண்ராஜா காமராஜ் அவருக்கு கனா என்ற படத்தை இயக்கும் வாய்ப்பினை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் கொடுத்தார். நண்பன் சிவகார்த்திகேயனின் நம்பிக்கையை காப்பாற்ற அருண் காமராஜ் கனா படத்திற்காக தீவிரமாக உழைத்து இருந்தார். குறிப்பாக அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

கனா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் செய்தது. பெண்களை ஊக்கப்படுத்தும் படமாக அமைந்த கனா தற்பொழுது சீனாவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது.

இன்று சீனாவில் வெளியான கானா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது கனா படத்தை பார்க்க சீனப்பெண் ஒருவர் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடிக் கொண்டு படத்தை பார்க்க செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. சீன பெண் ஒருவர் தமிழ் படமான கனா திரைப்படத்தை பார்க்க செல்லும் முன் தமிழில் பேசும் அழகே பார்ப்பவரை கவர்ந்து உள்ளது.

ரஜினியின் 2.0 படம் முதன் முதலாக சீனாவில் வெளியானது அதன் பின் இரண்டாவதாக தற்பொழுது சிவகார்த்திகேயனின் கனா திரைப்படம் வெளியாகி உள்ளது படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தகவல்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles