சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்த இவர் தமிழில் மெரினா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் முதலில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் வந்ததை சினிமாவில் உள்ள பிரபலங்களில் சிலர் கிண்டல் செய்து உள்ளனர். அதனை மனதில் வைத்துக்கொண்டு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தன்னுடைய கடின உழைப்பால் இன்று நம்ம வீட்டு பிள்ளையாக ஹீரோவாக டாக்டராக வலம் வந்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்து விட்டார்.
தயாரிப்பாளர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் காரணம் சிவகார்த்திகேயன் படத்தை பார்க்க குடும்பங்கள் தியேட்டருக்கு வருகிறார்கள் இதற்கு முன் ரஜினி விஜய்க்கு மட்டுமே கிடைத்த குடும்ப ரசிகர்கள் வரவேற்பு தற்போது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது. விஜய் சினிமா ஃபார்முலாவை கடைப்பிடித்து வரும் சிவகார்த்திகேயன் சிறந்த எண்டர்டெயினர் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தற்போது சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார் குறிப்பாக நெல் ஜெயராமன் அவர்கள் இறந்த பின்பு அவரது மகனை படிக்க வைத்து வருகிறார் அதுபோல நெல் ஜெயராமன் அவர்கள் மருத்துவச் செலவிற்கும் சிவகார்த்திகேயன் உதவி செய்தார்.
சமீபத்தில் நாகையில் குடும்ப வறுமையால் பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை செய்த பெண் ஒருவரை நாகையில் உள்ள ISSAC NEWTON NURSING கல்லூரியில் படிக்க வைத்துள்ளார். அந்தப் பெண்ணின் படிப்பு செலவை மொத்தமும் ஏற்றுள்ள சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தற்பொழுது சிவகார்த்திகேயன் பற்றி மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் மற்றும் பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்த படங்களில் பாடல்கள் எழுதினாலும் அதில் வரும் தொகையை அப்படியே மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் அவர்களின் குடும்பத்துக்கு கொடுத்து வருகிறாராம்.
நா முத்துக்குமார் அவர்கள் 2016 ஆம் ஆண்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு சென்னையில் மரணமடைந்தார். முத்துக்குமார் அவர்கள் தமிழில் ஏகப்பட்ட பாடல்களை எழுதி பல விருதுகளையும் வாங்கியவர். தற்போது அவரது குடும்பத்தினர் முத்துக்குமார் அவர்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். முத்துக்குமார் அவர்கள் தான் குடும்பத்திற்கு பெரிய பலமாக இருந்தார். இப்போது அவர் இல்லாத நேரத்தில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அதில் கிடைக்கும் மொத்த தொகையையும் அவரது குடும்பத்திற்கு கொடுத்து உதவி வருகிறார்.
சமீபத்தில் விஜயின் பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார் சிவகார்த்திகேயன் அந்த பாடல் FEB 14 அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்து வரும் நடிகர் இது போன்ற உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருவது பாராட்ட வேண்டிய ஒன்று.