சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் அஜித்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு இரட்டை போட்டி வேண்டுமென்றே சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என்று தமிழ் சினிமா ஜாம்பவான்கள் கொண்டுவந்துள்ளனர்.
ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவின் பிசினஸ்ஸை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருப்பது விஜய் மட்டுமே. விஜய் அஜித் என்ற இருவருக்கும் தொழில் போட்டி இல்லை என்றால் இன்றைக்கு சினிமா ரசிகர்களிடம் சுவாரசியம் குறைந்துவிடும். அது போல அடுத்த தலைமுறைக்கு விஜய் அஜித் போல நடிகர்கள் இருந்தால் தான் சினிமா பிசினஸ் நன்றாக நடக்கும் என்று புரிந்துகொண்ட சில ஜாம்பவான்கள் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என இருவருக்கும் தொழில் போட்டியை இப்போது ஆரம்பிக்க தொடங்கி விட்டார்கள்
தற்பொழுது சிவகார்த்திகேயன் அவர்கள் டாக்டர் மற்றும் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. தற்பொழுது டான் படமும் விரைவில் சூட்டிங் முடிவடைய இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது சிவகார்த்திகேயன் அவர்கள் அட்லியின் அசிஸ்டன்ட் டைரக்டர் அசோக் அவர்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அந்த அந்தப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் அசோக் இணையும் இந்தப் படத்திற்கு சிங்கம் பாதை என்று பெயர் சூட்ட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப்படம் தந்தை-மகன் உறவினை எடுத்துச் சொல்லும் ஆக்ஷன் நிறைந்த எமோஷனல் படமாக இருக்கும் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தில்
சிவாவிற்கு வெற்றிப்படமாக அமைய வாழ்த்துக்கள்.