சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மக்களின் மனதில் இடம் பிடித்து அதன்பின் காமெடியனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்.
முதலில் நகைச்சுவை கலந்த கதைகளை தேர்ந்தெடுத்து மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன் தற்போது தனது படங்களில் நகைச்சுவையோடு கதையிலும் கவனம் செலுத்தி வருகிறார். சிவகார்த்திகேயன் படங்கள் பிசினஸ் நன்றாக செய்வதால் தயாரிப்பாளர்கள் தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி காட்டிவருகின்றனர்.
ரஜினிக்கு அடுத்து குழந்தைகள் பட்டாளத்தை பிடித்தது விஜய் தான் ஆனால் தளபதி விஜய் அவர்களே ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை பார்த்து கிட்ஸ் எல்லாம் பிடிச்சிட்டாரு என்று பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நேரில் கூப்பிட்டு உங்களுடைய படங்களை என்னுடைய குழந்தைகள் விரும்பி பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளாராம் இதனை சிவா ஒரு பேட்டியில் கூறியதோடு விஜய் சார் என்னிடம் அப்படி கூறியிருப்பது சந்தோசமாக இருக்கிறது என்று கூறி உள்ளார்.
சமீபத்தில் சினிமா கலைஞர்களுக்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயனும் கலைமாமணி விருதை பெற்றார். பல நடிகர்களுக்கு கலைமாமணி விருதுகளை இந்த வருடம் அரசு அறிவித்திருந்தது. அந்த லிஸ்டில் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது பெற்றது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷம்.
சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். தமிழக அரசு கொடுத்த இந்த கௌரவமான விருதை சிவா தனது வீட்டிற்கு சென்றவுடன் தாயிடம் கையில் கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு இந்த விருதை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன் என்று இறந்த அவருடைய தந்தை படத்திற்கு அருகே வைத்திருந்தார்.
தாய்க்கு மரியாதை செய்த சிவகார்த்திகேயன் பார்த்த சக நடிகர்கள் தாய்க்கு மரியாதை செய்தவர்கள் தோற்றுப் போவதில்லை என்று புகழ்ந்து வருகிறார்கள்.