சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விஜய் டிவியில் பணிபுரிந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மெரினா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த அவர் தளபதி விஜயை போல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். சிவகார்த்திகேயன் அவர்கள் தனது சொந்த மாமாவின் பெண்ணை மணந்து கொண்டார் அவருடைய பெயர் ஆர்த்தி.
சிவகார்த்திகேயனுக்கும் ஆர்த்திக்கும் ஆராதனா என்ற பெண் குழந்தை தற்போது உள்ளது. தந்தையைப் போலவே திறமையாக இருக்கும் ஆராதனா கானா என்ற படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் பாடி அசத்தியிருந்தார் அந்த பாடலும் பெரிய ஹிட்டானது.
தற்பொழுது வெளிவந்த செய்தி என்னவென்றால் சிவகார்த்திகேயன் ஆர்த்தி அவர்களுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சந்தோசத்தில் சிவகார்த்திகேயன் 18 வருடங்களுக்கு பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்து இருக்கிறார் என் மகனாக என் பல வருட வழிப்போக்கன் உயிர்வழி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம் என்று உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இறந்த தந்தையை மீண்டும் பெற்று விட்டது போல மகன் பிறந்த சந்தோஷத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.