கல்பனா சாவ்லா இவரை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது 1997ல் விண்வெளி பயணம் செய்த முதல் இந்தியப் பெண் இவர் தான் அதுமட்டுமல்லாமல் இரண்டாவது விண்வெளிப் பயணம் சென்ற இந்தியன் இவர் தான்.
ராட்டினத்தில் ஏறவே தலைசுற்றும் நேரத்தில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெயரை வாங்கினார். தற்பொழுது கல்பனாசாவ்லாவை தொடர்ந்து விண்கலத்திற்கு செல்ல இருக்கிறார் இந்தியாவை சார்ந்த சிங்கப் பெண் ஷிரிஷா பண்டாலா.
ஆந்திரா குண்டூர் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர் அமெரிக்காவின் விர்ஜின் கேலடிக் விமான நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி விண்வெளிப்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். அந்தக் குழுவில் ஷிரிஷா பண்டாலாவும் ஒருவர்.
கல்பனா சாவ்லாவை தொடர்ந்து விண்வெளி பயணம் செய்யும் பெண் என்ற பெயரைப் பெற்றுள்ளார். இவருக்கு தெலுங்கு மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்துக்கள் சிங்கப் பெண்ணே.