பி சுசீலா இன்றும் இவருடைய குரல் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் எண்ணற்ற பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்த சுசிலா அவர்களுக்கு வயது 86 .
சுசீலா அவர்களின் பாடலை கேட்டு ரசிக்காதவர்களே இல்லை கிட்டத்தட்ட 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய அவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா போன்ற மொழிகளில் பாடியுள்ளார். இவருக்கு தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் நன்றாக பேசுவர்களாம்.
இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள் சீயான் விக்ரம் அவர்கள் சுசிலா அவர்களை நேரில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசியுள்ளார்.
அக்டோபர் மாதம் ஒருநாள் சுசீலா அம்மா வீட்டிற்கு ஒரு போன் வந்ததாம் நடிகர் விக்ரம் அவர்களின் மேனேஜர் பேசினாராம் விக்ரம் அவர்கள் சுசீலா அம்மாவின் பெரிய ரசிகர் அவர் அம்மாவை சந்திக்க விரும்புவதாக தெரிவித்து இருந்தாராம்.
சுசிலா அவர்களும் நாளை மாலை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் அடுத்த நாள் சுசீலாவை பார்க்க வந்த விக்ரம் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் பயம் கலந்த மரியாதையுடன் சுசீலா அவர்களுடன் பேசி வந்தாராம்.
சுசிலா அம்மாவும் விக்ரமிடம் சகஜமாக பேசி வந்தார்களாம் அப்போது விக்ரம் சுசிலாம்மாவின் பாடல்களைப் பற்றி பேசினாராம். சுசீலா அவர்கள் சில பாடல்கள் பாட விக்ரமும் இணைந்து சில பாடல்கள் பாடினாராம்.
இன்றைய முன்னணி கதாநாயகர் விக்ரம் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பணிவுடன் அடக்கமாக பழகியது சுசிலா அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்ததாம். பத்து நிமிடம் சுசிலா அம்மாவை பார்த்து விட்டு போகிறேன் என்று வந்தவர் 2 மணி நேரமாகியும் பேசிக்கொண்டு இருந்தாராம் விக்ரம். சுசிலா அம்மாவை சில பாடல்கள் பாடச்சொல்லி கேட்டு நெகிழ்ச்சியில் சந்தோஷப்பட்டாராம் விக்ரம்.
இந்த சம்பவத்தை சுசிலா அம்மா அவர்களின் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.