கொரானோ தொற்று காரணமாக உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்ட்டுள்ளனர். இந்நோயை கட்டுப்படுத்தி மட்டுமே குணப்படுத்தாமுடியும் என்பதனால் மக்கள் சற்று கவனமாக செயல்படவேண்டும்.
இந்நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தாலும் லட்சக்கணக்கானோர் இந்நோய் தொற்றிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அதுபோல பிரபல இந்திய பாடகி கனிகா கபூர், இவர் சில நாட்களுக்கு முன் லண்டன் சென்றுவிட்டு மார்ச் 15 ஆம் தேதி லக்னோவிற்கு வந்தார்.
அவருக்கு கொரானோ தொற்று இருந்தும் அதை பொருட்படுத்தாமல் ஒரு பிரபல ஹோட்டலில் அரசியவாதிகளுடன் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டதன் காரணமாக இவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து இவருக்கு சோதனை முடிவுகள் பாதிப்பு உறுதி என்றே வந்த நிலையில், நேற்று இவருக்கு கொரானோ பாதிப்பு இல்லை என்று சோதனை முடிவு வந்துள்ளது. இதன் காரணமாக கொரானோ தொற்றிலிருந்து மீண்ட இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.