Tuesday, May 14, 2024
-- Advertisement--

ஈஸ்வரன் இசை வெளியிட்டு விழாவில் யாரை மறைமுகமாக பேசினார் சிம்பு.!!! நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் ஆவேச பேச்சு.

ஈஸ்வரன் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிம்புவின் comeback படம் என்றே சொல்லலாம். சற்று ஊதி போய் குண்டாக இருந்த சிம்பு தற்பொழுது கோவில் படத்தில் எப்படி பார்த்தோமோ அப்படி இருக்கிறார்.

இந்த லொக்கடவுன் காலத்தில் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து தற்பொழுது மறுபடியும் செம ஸ்மார்ட் ஆக ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. உடலைக் குறைப்பதற்காக அவர் ஓடிக் கொண்டே இருப்பாராம் குறிப்பாக இரவு நேரத்தில் வீட்டிற்குள்ளேயே ஓடி வந்தார் சிம்பு அந்த வீடியோவும் இணையத்தில் வெளியானது.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தனது உடலை மறுபடியும் கனகச்சிதமாக வைத்துள்ளார் சிம்பு. சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து முடித்து தற்போது பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்தப் படம் கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற குடும்பத்தை சுற்றியுள்ள கதைபோல இருப்பதால் சிம்பு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஈஸ்வரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு ரசிகர்களிடம் உற்சாகத்துடன் பேசினார்.

எதுக்கு பொறாமை எதுக்கு மத்தவங்க நல்லா இருக்க கூடாதுனு நினைக்கணும் அவன் அப்படி இவன் இப்படி இதெல்லாம் ஏன் முதல்ல மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றத நிறுத்துங்க நீங்க மத்தவங்க அட்வைஸ் கேட்காதீங்க உங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும் அதை தெளிவாக பண்ணுங்க என்று யாரையோ மறைமுகமாக கூறினார் சிம்பு.

அதனைத் தொடர்ந்து பேசிய சிம்பு உள்ள நல்லா வச்சுக்கிட்டிங்கனா வெளில நல்லா இருக்கும். உள்ள நல்லா இல்லனா வெளியில எதுவுமே நல்லா இருக்காது. நமக்குள்ள தான் இறைவன் இருக்கிறார். நான் இப்போ உள்ள நல்லா வச்சுக்கிறேன் இப்போ என்னால பழைய படி ஆக்டிவாக இருக்க முடியுது.

நம்ம அவங்கள கவுக்கணும் இவங்கள கவுக்கணும்னு பிளான் பண்ணாதீங்க மேல கடவுள்னு ஒருத்தர் இருக்காரு பார்த்து சிரிச்சிடுவார் என்று கூறியதடன் இனி பேசமாட்டேன் செயலில் காட்டுவேன் என்று ஆவேசமாக பேசினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles