Sunday, May 19, 2024
-- Advertisement--

ஆள் அடையாளம் தெரியாதபடி திருமலை திருப்பதிக்கு கணவருடன் திடீர் விசிட் அடித்த ஸ்ரேயா..!!! செல்பி எடுத்துக்கொண்ட ரசிகர்கள்.

ஸ்ரேயா சரண் தமிழில் மழை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை. முதல் படத்திலேயே தாராளம் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஸ்ரேயாவிற்கு தொடர்ந்து தமிழ் படவாய்ப்புகள் குவிந்தது.

ஸ்ரேயா நல்ல டான்ஸர் என்பதினால் கமர்சியல் படங்களில் அவரை சரியாக உபயோகித்து கொண்டார்கள் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் சினிமாவில் பெரிதாக தலை காட்டாத ஸ்ரேயா அடிக்கடி தனது காதல் கணவருடன் வெளிநாடுகள் சுற்றிவருவது ரொமான்டிக் வீடியோக்களை பதிவிடுவது என்று தனது பொழுதை கழித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பார்ட்டிக்கு சென்று ஸ்ரேயா தனது கணவரை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் லிப் கிஸ் கொடுத்து கொடுத்தார் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது காதல் கணவருடன் காதல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஸ்ரேயா தற்போது ஆன்மிகச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

கணவருடன் ஸ்ரீகாளஹஸ்தி சென்று பூஜைகள் செய்த ஸ்ரேயா நேற்று திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து வந்துள்ளார் திருப்பதியில் ஆன்மீகச் சுற்றுலா செய்துவரும் அவர் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

தற்பொழுது ஸ்ரேயா ராஜமௌலி அவர்களின் RRR என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles