Thursday, May 9, 2024
-- Advertisement--

அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்து நோயாளியை கீழே தள்ளிவிட்ட மருத்துவ பணியாளர். அதிர்ச்சி சம்பவம்.

நாடெங்கும் கொரோனா என்ற கொடூர வைரஸால் நடுங்கி நிற்கும் நிலையில் நம் மனதை நடுங்க வைக்கும் சில சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு சிறப்பான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களைப் பாதுகாத்து வரும் இந்நேரத்தில் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சக்கர நாற்காலியில் இருந்து நோயாளியை கீழே தள்ளிவிட்ட மருத்துவ பணியாளரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

கிட்னி பாதிப்புகாக அனுமதிக்கப்பட்ட அந்த நோயாளி உட்கார முடியவில்லை என்று சொன்னதால் மருத்துவ பணியாளர் தள்ளிவிட்டார் என்று அந்த வீடியோ பரவி வருகிறது.

இந்த சம்பவத்தை பார்த்த அனைவரும் சமூக வலைத்தளத்தில் அந்தப் பணியாளர் மீது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு சம்பவம் அரசு மருத்துவமனையில் நடந்தது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை ஒழிப்பதற்காக அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நேரத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் இப்படி நடக்கலாமா என்று சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles