நேர்மையான போலீஸ் ருத்ரன் வடசென்னை கடற்கரை பகுதிக்கு இன்ஸ்பெக்டர் ஆகிறார். அந்த ஏரியாவில் அடியாட்கள், பணபலம், அதிகாரம் ஆகியவற்றுடன் தனி ராஜ்ஜியம் நடத்தும் வாதாபியை எதிர்த்து நிற்கிறார். கஞ்சா விற்று சிறுவர்களை ருத்ரன் விரட்டும் போது விபத்தில் சிக்கிய அவர்களில் ஒரு சிறுவன் இறந்து விடுகிறான். வீண் பலியால் ருத்ரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
வாதாபியின் சதிகளை உடைத்து எப்படி ருத்ரன் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது கதை. வழக்கமாக போலீஸ் கதையில் வன்கொடுமை சட்டம் மதமாற்றம் உள்ளிட்ட விஷயங்களை தேவையில்லாமல் கலந்து அதை பரபரப்பான விளம்பர உத்தி ஆகி இருக்கிறார். இயக்குனரும் தயாரிப்பாளருமான மோகன் ஜி வன்கொடுமை சட்டம் சில இடங்களில் தவறாக பயன்படுத்தப் படுவதால் அந்த சட்டமே தவறு என்றும் கட்டாய மத மாற்றம் சில இடங்களில் நடப்பதால் மதம் மாறுவது தவறு என்றும் பிறக்கும் போது எப்படி இருந்தோமோ அப்படியே இறக்கும்போதும் இருக்க வேண்டும் என்ற பிற்போக்குத் தனத்தை கற்பிப்பதும் தான் படத்தின் நோக்கமாக தெரிகிறது.
ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும் போலீஸ் மிடுக்கு மிஸ்ஸிங்.தர்ஷா குப்தா அன்பான மனைவியாக அறிமுகமாகி பிறகு சீரியல் வில்லி ரேஞ்சுக்கு வெறுப்பு காட்டுகிறார். கௌதம் மேனன் வடசென்னை தாதாவாக இருந்தாலும் தன் ஃபேவரட் ஹஸ்கி வாய்ஸில் பேசுகிறார். தம்பி ராமையா மட்டுமே தனது கேரக்டரை உள்வாங்கி நடித்துள்ளார்.
ந்நிலையில் ஷாலினி அஜித் ருத்ரதாண்டவம் படத்தை பார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது