ஷிவானி நாராயணன் பகல் நிலவு என்ற சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தின் மூலம் நடித்து சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானவர் சிவானி. அந்த சீரியலில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அசீம் என்பவரும் ஷிவானியும் நெருக்கமாக இருந்து வருவதாகவும் அவர்கள் காதலித்து வருகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளி வந்தது அந்த நேரத்தில்.
பகல் நிலவு சீரியலுக்கு பிறகு அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் அசீம் ஜோடியாக ஷிவானி நடித்துக் கொண்டிருந்தார் ஒரு சில பிரச்சனைகளால் ஷிவானி அந்த சீரியலை விட்டு விலகி இருந்தார் நீண்ட மாதங்களாக சீரியல் பக்கம் எட்டிப் பார்க்காத ஷிவானி ஜீ தமிழில் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வந்தார் திடீரென்று ஒரு சில காரணங்களால் அந்த சீரியலை விட்டு வெளியேறினார். அதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மேலும் பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் சிவானி.
தற்பொழுது வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என்று மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் பொன்ராம் அவர்கள் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஷிவானி நாராயணன்.
விஜய் சேதுபதியின் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷிவானி சமீபத்தில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் என்னது ஷிவானி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.