விஜய் டிவியில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சமீரா ஷெராப். இவர் அதே சீரியலில் நடித்த அன்வரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த ரெக்க கட்டி பறக்குது மனசு என்ற சீரியலில் நடித்து மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்தார். மேலும் இந்த சீரியலை இவர் தான் தயாரிக்கவும் செய்தார். இந்நிலையில் அந்த சீரியல் முடிந்த பிறகு இவரை பெரும்பாலும் பார்க்க முடியவில்லை.
சொந்தமாக யூ டூப் சேனல் வைத்து நடத்தி யாரும் சமீரா, சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சிறு வயது புகைப்படங்கள் போலவே தற்போது உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்.