விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினிய இருந்தவர் ஜாக்குலின். ஆனால் அங்கு தொகுப்பாளினி பிரியங்காவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் தொகுப்பாளினியை விட நமக்கு நடிப்பு தான் செட் ஆகும் என்று எண்ணி சீரியலுக்கு நடிக்க வந்தவர் ஜாக்குலின்.
விஜய் தொலைக்காட்சியில் மதியம் ஒளிபரப்பாகும் தேன்மொழி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு இந்த சீரியல் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.
இந்நிலையில் கொரானோ ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் இருக்கும் அவர் தெருவில் உள்ள நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். ஆனால் உணவை பக்கத்துவீட்டுக்கு முன் வைத்துள்ளார். இதனால் பக்கத்து வீட்டுக்காரர் சண்டை போட்டுள்ளார். மேலும் ஜாக்குலின் மன்னிப்பு கேட்டும் அவர் வீட்டின் உள்ளே சென்று சண்டை செய்துள்ளார்.
இதனால் ஜாக்குலின் மிகவும் மன வருத்தத்தில் உள்ளாராம்.