செம்பருத்தி என்ற சீரியலில் மூலம் சீரியல் பிரியர்களை கவர்ந்தவர் தான் ஷபானா ஷாஜகான். ஒரு நேரத்தில் ஆதியும் பார்வதியும் சேர்ந்து விட மாட்டார்களா என்று தவம் கிடந்த ரசிகர்களும் இருந்தார்கள் அந்த அளவிற்கு செம்பருத்தி சீரியல் சுவாரசியமாக கொண்டு சென்றார்கள்.
அதில் முக்கிய பங்கு பார்வதியாக நடித்த ஷபானாவிற்கு உண்டு. ஒரே சீரியல் மூலம் பெரிய பிரபலத்தை பெற்ற ஷபானாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்கள் வீட்டு மகள் போல நினைத்து வரும் ரசிகர்களை சில நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. மக்களின் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்த ஷபானா சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்து கொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு கூட ஷபானா கண்கலங்கி நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் எனக்கு ஆதரவு கொடுத்த எனது ரசிகர்களுக்கு நன்றி உங்களுடைய ஆசீர்வாதம் தேவை என்னுடைய வாழ்க்கையை தொடங்கப் போகிறேன் என்று உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஷபானா ஆரியன் திருமணமும் நடந்து முடிந்தது இந்நிலையில் ஷபானா ஆரியன் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது ஆரியனின் குடும்பத்திற்கு ஷபானாவை பிடிக்கவில்லை. ஷபானாவும் திருமணமாகி ஒரு மாதம் ஆகியும் ஆரியன் வீட்டுக்கு செல்லவில்லை என்றெல்லாம் செய்திகள் வந்தது அத்தோடு இல்லாமல் ஹனிமூனுக்காக பாண்டிச்சேரி 4 நாட்கள் பிளான் செய்து சென்ற ஷபானா ஆரியன் தம்பதியினர் மறுநாளே சில பிரச்சனைகளால் வந்து விட்டார்கள் என்று அவருடைய நெருங்கிய தோழி ஒரு பிரபல பத்திரிகையிடம் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஷபானா ஆரியன் திருமணமாகிய ஒரு மாதத்திலேயே அவர்கள் உறவில் விரிசல் என்றெல்லாம் செய்திகள் வர ஆரம்பித்தது அமைதி காத்து வந்த ஷபானா திடீரென்று தனது நிச்சயதார்த்த நாளில் ஆரியன் உடன் எடுத்துக்கொண்ட வீடியோக்களில் சில நிமிடங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காதல் கல்யாணம் என்பது மதம் சார்ந்தது அல்ல மனம் சார்ந்தது இன்று போல் என்றும் நீங்கள் நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள் என்று ரசிகர்களை வாழ்த்தி வருகிறார்கள்.