Wednesday, May 8, 2024
-- Advertisement--

ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி பொய் கூறிவிட்டேன் உண்மையை போட்டு உடைத்த செல்வராகவன்..!!! அடப்பாவமே இவரும் இப்படியா.

செல்வராகவன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு அவருடைய படங்களில் அழுத்தமான கதையும் கதாபாத்திரங்களும் இருக்கும். இன்றும் செல்வராகவனின் திரைப்படத்தில் வரும் காட்சிகள் ரசிகர்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் வகையில் இருக்கும்.

இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியேறிய பின்னும் சில மணி நேரங்கள் அந்த தாக்கம் இருக்கும். இவர் எடுத்த காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, புதுப்பேட்டை போன்ற படங்களை அதற்கு பெரிய சான்று.

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது படக்குழுவினர் அனைவரும் பெரும் வருத்தத்தில் இருந்தனர் ஆனால் சில வருடங்கள் கழித்து செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் பலருக்கு ஃபேவரிட் படமாக இருந்தது.

படம் ரிலீஸ் ஆன போது மக்கள் கொடுக்காத வரவேற்பு ரிலீசாகி பல மாதங்கள் கழித்து கொடுத்தது படக்குழுவினர்களுக்கு பெரிய வருத்தம் என்றாலும் எப்படியோ மக்கள் ஒரு வழியாக படத்தை ஏற்றுக் கொண்டார்களே என்று நினைத்தார்கள் படக்குழுவினர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ பாண்டியன் வம்சங்களை எடுத்துச் சொல்லிய செல்வராகவனிடம் ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது என்று அனைவரும் கேட்டு வந்தனர் இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் தயாராகி கொண்டிருக்கிறது அதில் ஹீரோவாக தம்பி தனுஷ் நடிக்கிறார் என்று தெரிவித்து ஃபர்ஸ்ட்லக் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஆயிரத்தில் ஒருவன் ஒரு படத்திற்காக கார்த்தி பல படங்களை தவிர்த்து வந்தாராம் அதுபோல ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக தனுஷ் நிறைய படத்தை தவிர்க்க வேண்டி வருமே என்று சினி வட்டாரத்தினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப்பற்றி நான் பொய் கூறி விட்டேன் என்று பெரிய குண்டை தூக்கி போட்டு உள்ளார் இயக்குனர் செல்வா. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் 18 கோடி நாங்கள் 38 கோடி மெகா பட்ஜெட் படம் என்று பிரமோஷன் செய்தோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது இப்பொழுது தான் புரிகிறது. ஆயிரத்தில் ஒருவன் படம் முன்பே 18 கோடி பட்ஜெட்டை எடுத்து விட்டது ஆனால் நாங்கள் 38 கோடி செலவு என்று புரமோட் செய்ததால் அது தோல்விப்படம் என்று கருதினார்கள் என்று கூறியுள்ளார். செல்வராகவன் கூறியதும் நீங்களும் இப்படிலாம் ரீல் விடுவிங்களா செல்வராகவன் சார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தற்பொழுது செல்வராகவன் தளபதி விஜயின் டீஸ்ட் படத்தில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles