செல்வராகவன் படங்கள் சூர்யாவின் NGK டத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் வெளியாகாமல் இருந்த இந்நிலையில் செல்வரகவன் அவர்கள் தனது அடுத்த படத்தின் அப்டேட் ஒன்றை அளித்திருந்தார். அதாவது ஆயிரத்தில் ஒருவன் பாகம் இரண்டில் தனது தம்பி தனுஷை வைத்து இயக்க உள்ளதாக அப்டேட் கொடுத்திருந்தார்.
ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை எடுக்க பல ஆண்டுகள் ஆகிவிட்டது இதில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்று ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்தனர். இனி செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் படத்தை பார்க்க முடியும் என்று சோகத்தில் இருந்த செல்வராகவனின் ரசிகர்களுக்கு விருந்தாக மார்ச் 5ஆம் தேதி ஏற்கனவே செல்வராகவன் இயக்கி வெளிவராமல் இருந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்கள்.
படத்தின் பெயர் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் SJ சூர்யா ஹீரோவாக நடிக்க ரெஜினா ஹீரோயினாக நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட எஸ் ஜே சூர்யா தளபதி விஜய் அவர்கள் படத்தைப் பார்த்துவிட்டு உங்களின் ரசிகன் ஆகிவிட்டேன் என்று கூறியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்பொழுது நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஒருசில காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்தக் காட்சிகளை பார்த்த பிரபலங்கள் SJ சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.