Friday, May 17, 2024
-- Advertisement--

தவறான தோற்றத்தில் சமந்தாவை வைத்து சித்தரித்த ஹிந்தி தொடரை வெளியிட கூடாது – சீமான்.

தமிழர்களை கொச்சைப்படுத்தி பேமிலி மேன் 2 என்ற இணைய தொடரை வெளியிடுவதை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் மிகமோசமான எதிர்ப்புகளை சந்திக்க நேரும் என்று எச்சரித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அமேசான் பிரைமில் தி பேமிலி மேன் 2 என்ற இணைய தொடரின் முன்னோட்டம் நேற்று வெளியானது இந்த தொடரில் பிரியாமணி மற்றும் சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த தொடரில் சமந்தா விடுதலைப்புலி போல வேடமிட்டு நடித்திருந்தார் ஆனால் இந்த கதை விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து காட்டியுள்ளார்கள்.

எப்படி சமந்தா இது போன்ற கதாபாத்திரத்தில் அதுவும் விடுதலைப் புலிகளை தீவிரவாதி போல சித்தரிக்கும் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று சமந்தா மீது நேற்று ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இந்த இணையத் தொடர் தப்பான நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சி அமைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

இந்தியில் வெளியாகும் இந்த தொடரின் கதை களத்தை சென்னைக்கு மாற்றி அதில் ஒரு ஈழப் பெண்ணை போராளியாக சித்தரித்து அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்க செய்திருப்பதும் தற்செயலானதல்ல.

தமிழர்களை தவறாக தோற்றம் கொள்ளச் செய்யும் இந்த இணைய தொடரின் முன்னோட்டம் வெளியான உடனே உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் பெரும் கோபத்துடனும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

தி பேமிலி மேன் 2 எனும் இணைய தொடரின் ஒளிபரப்பை ரத்து செய்ய வேண்டும் இதற்கு முன்பே தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ரத்து செய்யப்பட்டது போல இந்த தொடரும் ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles