சீமான் தமிழ் நாட்டிற்கு கிடைத்த ஒரு போல்டான அரசியல் கட்சித் தலைவர். இவருடைய பேச்சு தான் இன்றைய இயக்குனர்களுக்கு வசனம். இவருடைய மேடை பேச்சை தான் இயக்குனர்கள் தங்களது படத்தில் வசனங்களாக வைத்து வருகின்றனர்.
தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்கள் பேசி மக்களிடம் கைத்தட்டு வாங்கும் வசனங்கள் அனைத்தும் இவர் முன்னே மேடையில் பேசியது தான். இவருடைய மேடைப் பேச்சுக்களை கேட்டவர்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கும் இவரது பேச்சு. அந்த அளவிற்கு இவர் பேச்சில் தெளிவும் அர்த்தமும் இருக்கும். இந்த தேர்தலில் சி எம் ஆகவேண்டும் என்று எண்ணாமல் தங்களது கொள்கை மக்களுக்கு சென்றடைந்தால் என்றாவது ஒருநாள் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும் என்ற ஒரு பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார் சீமான்.
அதுபோல சீமானின் கட்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையும் எழுந்துள்ளது. ஏகப்பட்ட இளைஞர்கள் நாம் கட்சி தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
மாற்றம் உடனே வராவிட்டாலும் பரவாயில்லை என்றாவது வரட்டும் என்று நாம் தமிழர் கட்சியை பின்பற்றும் இளைஞர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை தயார் செய்துள்ளார்.
வருகின்ற மார்ச் 7ம்தேதி 234 தொகுதி வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளார். 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் வேட்பாளர்கள்.
ஆண் வேட்பாளர்களை மட்டும் தேர்தலில் நிறுத்தாமல் சரிக்கு சமமாக பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தும் முடிவுக்கு பாராட்டி வருகின்றனர் மக்கள்.
இந்தியாவிலே ஆணுக்கு பெண் சமமாக அரசியல் அதிகாரம் வழங்கும் ஒரே கட்சி நாம் தமிழர் தான் என்று பெருமையாக சொல்லலாம்.