Monday, May 20, 2024
-- Advertisement--

தைரியமாக இருங்கள் சீமான் முதல்வரிடம் இருந்து வந்த போன் கால்..!!! கதறி அழுத சீமான்..!!! உருக்கமான சம்பவம்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூரில்ஊரில் வசித்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

தன் தந்தை உயிரிழந்ததை தாங்கமுடியாத சீமான் அழுதுகொண்டே தன் தந்தையின் உடலின் பக்கத்திலே நின்றார். சீமானுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியை சார்ந்தவர்கள் சிலர் இருந்தனர்.

தன் தந்தையை இழந்து கண்ணீர் விட்ட சீமானுக்கு திடீரென்று முதல்வர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது அதில் ஸ்டாலின் அவர்கள் சீமானிடம் தைரியமாக இருங்கள் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் கலங்க வேண்டாம் என்று கூறினார்.

ஸ்டாலினின் ஆறுதலை கேட்ட சீமான் கண் கலங்கி கொண்டே நீங்க என் கூட இப்போது இருக்கிறது எனக்கு ரொம்ப துணையா இருக்கு ரொம்ப பெருமையா இருக்குது ரொம்ப பெருமையா இருக்குது என்று அழுகையை கண்ட்ரோல் செய்ய முடியாமல் அழுதார். தந்தையின் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுத சீமானுக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் சொல்லி வந்தனர்.

தந்தை மீது அளவற்ற பாசம் கொண்ட சீமான் தன் தந்தையை இழந்து வாடிய நிலையில் தனக்கு எதிரான கட்சி என்பதை கொஞ்சம் கூட மனதில் வைத்துக்கொள்ளாமல் தைரியமாக இருங்கள் சீமான் என்று முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறியது உருக்கமாக இருந்தது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles