சீமான் பாரதிராஜா, மணிவண்ணன் அவர்களின் படங்கள் பிடித்துப்போய் இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு சினிமா துறையில் நுழைந்தவர். இவர் முதன் முதலில் இயக்கிய படம் பிரபு ஹீரோவாக நடித்து வெளியான பாஞ்சாலங்குறிச்சி . அதனைத் தொடர்ந்து சில படங்களை எடுத்த சீமான் சில சறுக்கல்களை சந்தித்து இதற்கு பின் மீண்டும் தம்பி என்ற வெற்றிப்படத்தை அடுத்து சினிமாவில் தலை நிமிர்ந்து நின்றார்.
சீமானின் படங்களில் அவருடைய கருத்தை ஆழமாக கூறியிருப்பார். இவர் எடுத்த பள்ளிக்கூடம் எவனோ ஒருவன் மற்றும் மாயாண்டி குடும்பத்தார் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து சீமான் தளபதி விஜயுடன் இணைந்து பகலவன் என்ற படத்தை இயக்க இருந்தார். விஜய் சீமான் கூட்டணியில் இணைய இருக்கும் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. ஒரு சில பிரச்சினைகளாலும் கால்ஷீட் இல்லாத காரணத்தினாலும் விஜய் சீமானுடன் இணைய முடியாமல் போனது.
அதன்பின் கட்சிப் பணிகளில் பிஸியான சீமான் நாம் தமிழர் கட்சியை வலிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். எந்த ஒரு பிரச்சனை என்றாலும் குரல் கொடுத்து வரும் சீமான் எந்த ஒரு கருத்தையும் தைரியமாக வெளியில் எடுத்துரைப்பார்.
தமிழர்களுக்கு அடையாளம் வேண்டும் தமிழர்கள் ஆள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சீமான் நாம் தமிழர் கட்சியை படிப்படியாக முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றுள்ளார். சீமானின் பேச்சைக் கேட்கவும் அவருடைய கட்சியை பின்பற்றவும் இளைஞர்கள் துணை நிற்கிறார்கள்.
இன்று சீமான் அவர்களின் பிறந்தநாள் அதற்கு பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர் மனோபாலா கண்டிப்பாக ஒரு நாள் என்று கூறி சீமானை வாழ்த்தியுள்ளார். கண்டிப்பாக ஒரு நாள் நாம் தமிழர் கட்சி தலைமை ஏற்கும் என்பதை மறைமுகமாக மனோபாலா கூறியிருக்கிறார் என்று சீமானின் தம்பிகள் கூறி வருகிறார்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீமான் அண்ணா.