தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முதல் கையெழுத்தை மக்களுக்கு நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்தார்.
அதில் முதல் தவணை 2000 ரூபாய் மே மாதமும் மற்றொரு தவணை 2000 ரூபாய் ஜூன் மாதத்திலும் தருவதாக அறிவித்து இருந்தார்.
தமிழக அரசு அறிவித்தபடி முதல் தவணை 2000 ரூபாய் மே மாதம் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து தற்போது முதல்வரின் தந்தை கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல்வாழ்விற்காக கொரோனா இரண்டாவது தவணை 2000 ரூபாயும் மற்றும் 14 வகை மளிகை பொருட்களுடன் வழங்க இருக்கிறார்.
இதற்கான டோக்கன் வழங்கும் பணி நாளை முதல் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.