Monday, May 6, 2024
-- Advertisement--

கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் அதிரடி கைது…!!!

கோவை கோட்டை மேடு பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஆர்எஸ் புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்தபோது இயற்பியல் ஆசிரியரான ஆர்எஸ் புரம் லாலி ரோட்டை சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதன் காரணமாக மாணவி கடந்த 11 ஆம் தேதி வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் எதுவும் சக்கரவர்த்தியை கைது செய்ய வேண்டும் அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவோடு இரவாக ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதான மிதுன் சக்கரவர்த்தி மேலும் பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதே தனியார் பள்ளியில் மேலும் 16 மாணவிகளுக்கு அவர் போட்டோ மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விசாரணையில் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அத்துமீறலை சகிக்க முடியாமல் பல மாணவிகள் புலம்பி வந்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு இருந்ததால் இவரது செல்போன் எண்ணை மாணவிகள் பிளாக் செய்ய முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லையை தொடர்ந்துள்ளார்.மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து நேற்று 2-வது நாளாக கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் பற்றி புகார் தெரிந்தபோதும் ஆசிரியரை தண்டிக்காமல் மாணவியை கண்டித்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது நேற்று போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூருவில் அதிரடி கைது

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles